தடதடத்துச் செல்லும்
இரயில் ஜன்னலோரம்
படபடத்து விலகும்
பட்டாம் பூச்சியாக
ஒற்றைப் பார்வையில்
படபடத்து விலகி
மெளனம் காத்தது நம் காதல்..
வந்துபோன சுவடேதும்
வரையாமல் மறைந்தது இரயில்..
கடந்துபோனக் கவலையின்றிக்
கள்ளுண்ணப் பறந்தது பட்டாம்பூச்சி..
நொடியில் கடந்து
மறைந்த இரயிலின்
அதிர்வுகளை சுமந்துத்
தண்டவாளங்களாய்
நீயும் நானும்..!!