Saturday, May 26, 2012

நிழலாக..!!



நீரின் நீலமும் ஆழமும் நீயாகவேத் தோன்ற
கரையில் நகர்கிறேன் நான்..
வெறும் நிழலாக..!!

Monday, May 21, 2012

நீ வருவாய் என..!!

அலையில்லாக் கடலில்
கரைதேடாக் கட்டுமரத்திற்கு
வழிக்காட்டும் கலங்கரை விளக்கமாக..
நிலையில்லாக் கனவில்
விழிமூடிக் காத்திருக்கிறேன்
நீ வருவாய் என..!!

Friday, May 18, 2012

கல்லூரிக் காதலர் தினம்!


காதலும் தவிப்பும் கண்களில் போட்டியிட
கனவுகளோடுத் திறக்கப்படும் கல்லூரி வாசல்!!
காதலைச் சொல்ல இன்றேக் கடைசி நாள் போல..
கடிதங்களை வினாத் தாள்களாக்கிக் காத்திருக்கும் மாணவர்கள்!!
காதலிகள் தேவதைகளானதால்
காதல் தேர்களானக் கல்லூரிப் பேருந்துகள்!!
வாச ரோஜாக்கள்.. வாழ்த்து அட்டைகள்..
வண்ணப் பூங்கொத்துக்கள்..
வகை வகையாகப் பரிசுப் பொருட்கள்..
கடைகளில் லாபக் கணக்கு.. காதலின் பெயரால்!!
‘இன்று எப்படியும் சொல்லிவிட வேண்டும்’
என்று வீரமாகத் தொடங்கி..
‘இன்றும் சொல்லத் தயக்கம்’
என்று வழக்கம்போல் அசடு வழிந்த வசனங்கள்!!
‘இன்றாவது சொல்வாயா?’ -
கேள்வியோடுக் கடந்தக் கண்கள்...
‘சொன்னால் ஏற்றுக் கொள்வாயா?’ -
தவிப்போடுத் தடுமாறிய இதழ்கள்!!
தினம் நடக்கும் சந்திப்புதான் என்றாலும்
இனம் புரியா சிலிர்ப்போடு நகர்ந்த கணங்கள்!!
கேட்டும் கேட்காமலும்,
மறுத்தும் கொடுத்தும்
பரிமாறப்பட்ட முத்தங்கள்!!
கண்ணடித்து கலாய்த்து விட்டுக்
காதோடு உரசிப் போனக் கிண்டல்கள்!!
கனவுகளோடுப் பூத்தப் புதுக் காதல்கள்..
காதலா நட்பா என்றக் கண்ணாமூச்சிகள்..
கண்களில் மட்டும் தழும்பிவிட்டு
கரையேர அஞ்சி மூழ்கியக் காதல்கள்..!!
கிழித்தெறியப்பட்டக் காதல் கடிதங்கள்..
சிதைந்தப் பூங்கொத்துக்கள்..
இன்னும் அழகாக என்னென்னவோ
நிராகரிக்கப்பட்டக் காதல் சின்னங்களை
ஆதரித்த வகுப்பறைக் குப்பைத் தொட்டிகள்!!
எத்தனைக் காதல்கள்...
எத்தனைக் காதலர்கள்..
கல்லூரி வளாகத்தோடு முடிந்தவைப் பல..
காலங்கடந்துத் தெரிந்தவைப் பல..!!
காலப் பயணத்தில்
கல்லூரிப் பூங்காக் கடந்துக்
காதங்கள் பலப் பயணித்தப் பின்னும்..
நெஞ்சோரம் நீங்காமல் நிறைந்திருக்கின்றன..
கல்லூரிக் காதலர் தினக் காட்சிகள்..!!

நீளட்டும் இந்த பயணம்..!!