கதவுகள்
இல்லாத
கண்ணாடி
மாளிகைக்கு
கட்டாய
விருந்துக்குப் போனேன்..!
முகங்களைக்
காணவில்லை
முகமூடிகள்
மட்டும் உலவிக்கொண்டிருந்தன..
அரிதாரம்
பூசிய முகமூடிகளின் நடுவே
அருவருக்கப்பட்டது
என் முகத்தின் நிர்வாணம்..!
தங்க
மேசையில் வெள்ளித் தட்டுகளில்
தக்க
அலங்காரங்களோடு பரிமாறப்பட்டன போலிகள்..
புளித்த
போலிகளைப் புசித்த முகமூடிகள்
சுளித்த
என் நெற்றியை வெறித்து நோக்கின..!
எண்ணப்
பொய்களெல்லாம் மதுவாகி
வண்ணக்
கோப்பைகளை நிறைத்தன!
கள்ளமெல்லாம்
கவி பாட
முகமூடிகள்
ஆடிக் கொண்டிருக்கின்றன..!
முறுபுறம்
விரிந்த நந்தவனத்தில்
கருமலர்கள்
பூத்த சோலையில்
விண்மீன்களை
எண்ணிக் கொண்டிருக்கிறேன்
நிலவின்
நிழலோடு..!!
No comments:
Post a Comment