Tuesday, February 19, 2013

நீயே என் பிரார்த்தனை..!



உயிர் குளிருமோர் பெளர்ணமி இரவில்
மயிர் கூச்செறியும் மந்தகாசத் தென்றலில்
வேங்குழலின் தீங்குரலும் கலந்திசைக்க
ஏங்குமென் பூமனமும் கசிந்துருக
கண்களில் நிறைந்து
கன்னங்களில் வழிகிறது
என் பிரார்த்தனை..
அதன் ஒவ்வொருத் துளியிலும்
மிதந்து மின்னிச் சரிகிறது
உன் பிம்பம்..!!

No comments:

Post a Comment