"மரம் எப்படியிருக்கும்?" என்று கேட்டாள்
"பச்சை நிறத்திலிருக்கும்" என்றேன்..
"நிலவு எப்படியிருக்கும்?" என்று கேட்டாள்
"வெள்ளை நிறத்திலிருக்கும்" என்றேன்..
"கடல் எப்படியிருக்கும்?" என்று கேட்டாள்
"நீல நிறத்திலிருக்கும்" என்றேன்..
"குயில் எப்படியிருக்கும்?" என்று கேட்டாள்
"கருப்பு நிறத்திலிருக்கும்" என்றேன்..
"பவளம் எப்படியிருக்கும்?" என்று கேட்டாள்
" சிவப்பு நிறத்திலிருக்கும்" என்றேன்..
"நிறம் எப்படியிருக்கும்?" என்று கேட்டாள்
-என்ன சொல்வேன்??!!
அவள் கண்களையே பார்த்தேன்..
அவை ஒளியில்லா விளக்குகள்!!
Saturday, April 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment