முதல் முறை உன்னைப் பார்த்த பொழுது
புன்னகையோடு முடிந்த மௌனம்!
நீ என்னிடம் பேசியபொழுது
மகிழ்வோடு முடிந்த மௌனம்!
நட்போடு நாம் பழகிய நாட்களில்
நெஞ்சோடு நாம் வளர்த்த காதல் மௌனம்!
சொல்லலாமா வேண்டாமா என யோசித்து
தயக்கத்தின் வாசலைத் திறக்காத மௌனம்!
நீ சொல்வாய் என எதிர்பார்த்து
என்னை ஊமையாக்கிய மௌனம்!
நாம் பிரிந்து சென்ற பொழுதும்
நம்மை விட்டு பிரியாத மௌனம்!
எனக்கு மணம் முடிக்க ஆசைப்பட்ட தந்தையிடம்
சம்மதம் என்று சொன்ன மௌனம்!
உனக்கு அனுப்பிய என் அழைப்பிதழ்
முகவரித் தவறென்று திரும்பிய மௌனம்!
என் மகள் கையில் நீ தந்த ரோஜாச் செண்டு
'இது உனக்காக வாங்கியது' என்ற உன் கண்ணீரின் மௌனம்!
காலம் கடந்து விட்டதால் கலையாமல்
நம் கனவுகளுக்குக் கல்லறை கட்டிவிட்ட மௌனம்!
Sunday, April 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
wow.... nice one de...
ReplyDeletesoooperaaa iruku te thamizhu....
ReplyDeleteNICE LINES.............
ReplyDeleteGOOD KEPT IT UP...